300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்களை வைத்து கொண்டு ஏமாற்றி பணம் பறித்த இளைஞர்!

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள சத்யா நகரில் சந்தீப் என்ற இளைஞர் வசித்து வருகிறார்.இவர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பணக்கார பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் நெருக்கமாக பழகி அதன் மூலம் பணம் பறிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் நான் மென்பொறியாளர் பேசுகிறேன்,உங்களின் புகைப்படங்கள் ஆபாசமாக வந்துள்ளது.நான் அதை அளிப்பதற்கு நீங்கள் 40,000 பணம் கொடுக்கவேண்டும் என்று பலமுறை வாங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண் பணம் தர மறுத்ததால் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் சந்தீப்பை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது சந்தீப் இந்த ஒரு பெண்ணை மட்டும் ஏமாற்றவில்லை, 300-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.இந்நிலையில் சந்தீப்பிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.