எப்போதோ வந்திருக்க வேண்டியவர் நீங்கள்,தாமதமாக வந்துவிட்டீர்கள்-ஸ்டாலின்

  • மக்களவை தேர்தல் நெருங்கு வருகிற நிலையில், அதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது
  • வி.பி.கலைராஜன்  நேற்று ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை  இணைத்து கொண்டார்.

மக்களவை தேர்தல் நெருங்கு வருகிற நிலையில், அதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல்  மற்றும் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்  பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இவர் தினகரன் ஆதரவாளராக இருந்து வந்தவர்.

இதனையடுத்து, நேற்று ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார்.திருச்சியில் அவரை வரவேற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின், `எப்போதோ வந்திருக்க வேண்டியவர் நீங்கள், தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறீர்கள்’ என நெகிழ்ந்து கொண்டார். மேலும், இவர், கலை, இலக்கியம் போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment