#ELECTIONBREAKING: நேற்று மநீம.., இன்று அமமுக உடன் SDPI பேச்சுவார்த்தை..!

SDPI கட்சி நிர்வாகிகள், டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஏற்கனவே ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக  SDPI கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாக்வி டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்திப்பு எதற்க்காக நடைபெறுகிறது என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

நேற்று  மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி 18 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan