மகளிர் உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து..!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சொதப்பிய இந்தியா: 

அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா (35 ரன்கள்) குவித்தார். இரண்டாவது சிறந்த தனிநபர் ஸ்கோராக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ரன் பார்க்கப்படுகிறது. இவர் 33 ரன்கள் எடுத்தார். இதைத் தவிர வேறு எந்த வீராங்கனையும் 20 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. இங்கிலாந்து தரப்பில் சார்லட் டீன் 4, அன்யா ஷ்ருப்சோலி 2 விக்கெட்டை பறித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் இந்திய விக்கெட்டை பறித்தனர்.

135 ரன்கள் இலக்கு:

135 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாமி பியூமண்ட், டேனியல் வியாட் இருவரும் தலா 1 ரன் எடுத்து வெளியேறினர். பின்னர் இறங்கிய ஹீதர் நைட், நடாலி ஸ்கிவர்  இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய நடாலி ஸ்கிவர் 45 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர்  அதிரடியாக விளையாடிய கேப்டன் அரைசதம் விளாசி 53* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

இங்கிலாந்து வெற்றி: 

இறுதியாக இங்கிலாந்து அணி 31.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 4 போட்டிகள் விளையாடியிருக்கும் இந்தியாவுக்கு இது இரண்டாவது தோல்வி.

 

author avatar
murugan