#BREAKING : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி- முதல்வர் அறிவிப்பு ..!

இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டுறவு வங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெறப்பட்ட கடனும் தள்ளுபடி என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி எனவும் அறிவித்துள்ளார். இதற்கு முன் விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெறப்பட்ட கடனும் , நகை கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

author avatar
murugan