சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மதுரை வீரர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மதுரை வீரர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எதிர்த்துப் போரிட்ட பாதுகாப்பு படையை சேர்ந்த மதுரையை சேர்ந்த வீரர் பாலுசாமி உயிரிழந்துள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக திபெத் எல்லையில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரக்கூடிய மதுரை பொய்கைக்கரைப்பட்டி சேர்ந்த லக்ஷ்மன் என்பவரின் மூன்றாவது மகன் தான் பாலுசாமி. 31  இளம் வீரரான பாலுசாமிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் தான் திருமணமாகியுள்ளது. தற்பொழுது இவருக்கு ஒன்றரை வயது குழந்தை ஒன்றும் உள்ளதாம்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த இவர், இன்று சத்தீஸ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குடும்பத்தைப் பிரிந்து நாட்டிற்காக பணியாற்றிய பாலுசாமியின் உயிரிழப்பு மதுரையில் உள்ள பொய்கைகரைப்பட்டியை சேர்ந்த மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube