விமான பயணத்தின் போது நடுவானில் உயிரிழந்த 2 குழந்தைகளின் தாய்

Flight: டொமினிக்கன் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற விமானத்தில் 41 வயதான பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெபானி ஸ்மித் என்ற 41 வயதான பெண் அமெரிக்காவின் சார்லோட் நகருக்கு விமானத்தில் பயணம் செய்த போது நடுவானில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமானமானது Turks and Caicos தீவில் உள்ள பிராவிடன்சியல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் ஸ்டெபானி ஸ்மித், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. ஸ்டெபானியின் மரணம் அவர் குடும்பத்தாரையும், நண்பர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read More – விமானம் பறக்கும்போதே கழன்று விழுந்த டயர்… வைரலாகும் வீடியோ!

அவரின் தோழி மரியா கூறும் போது, தனது காதலனுடன் ஸ்டெபானி அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றார், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் அவர் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறார் என கூறியுள்ளார். ஸ்டெபானிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment