குடிபோதையில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..! மடக்கிப்பிடித்த போலீசார்…!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட பெண்ணை மடக்கிப்பிடித்த போலீசார். 

பொதுவாக ஆண்கள் தான் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதுண்டு. ஆனால்,  நுங்கம்பாக்கத்தில் பெண் ஒருவர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் காரில் சென்றுகொண்டிருந்த பெண் திடீரென கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அந்த காரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.  அப்போது, காரில் இருந்த 3 இளைஞர்கள், கூச்சலிட்ட பெண் மதுபோதையில் இருந்த நிலையில், இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும், அப்பெண்ணை காரில் இருந்து இறங்குமாறு போலீஸ் கூறியபோது, மதுபோதையில் இளம்பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.