மீண்டும் மிக்-21 ரக விமானத்தில் பறந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்

மீண்டும் மிக்-21 ரக விமானத்தை இயக்கினார் விங் கமாண்டர் அபிநந்தன்.

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு இந்திய ராணுவம் பல விசாரணைகளுக்கு பிறகு இந்திய ராணுவத்தில் அபிநந்தனை சேர்த்தனர்.

இந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு விங் கமாண்டர் அபிநந்தன் விமானத்தில் பறக்க தொடங்கியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து இந்திய விமானப்படை தளபதி தனோவாவுடன் மீண்டும் மிக்-21 ரக விமானத்தை இயக்கினார் விங் கமாண்டர் அபிநந்தன்.