15 ஆண்டுகளுக்கு பின் கணவனுடன் இணையும் மனைவி!

நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் முதன்முதலாக வெள்ளை மனசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அணைத்து மொழி திரைப்படங்களிலும் கொடிகட்டி பறக்கும் ரம்யா கிருஷ்ணன் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது கணவரான கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் உருவாகாவிருக்கும் ‘வந்தே மாதரம்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு இவர் 2004ம் ஆண்டு ஆஞ்சநேயம் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.