கடற்கரையில் காணாமல் போன மனைவி..! ரூ.1 கோடி செலவு செய்து தேடிய நிலையில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கடற்கரையில் காணாமல் போன மனைவியை ரூ.1 கோடி செலவு செய்து தேடிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி 

ஆந்திராவில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாய்பிரியாவுக்கும், அவரது உறவினரான சீனிவாசன் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பதாக திருமண நடைபெற்றது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அப்போது இருவரும் அமர்ந்திருந்து நேரத்தில் சீனிவாசனுக்கு போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து சாய்பிரியா கணவன் கவனிக்காத நேரம் பார்த்து அங்கிருந்து தப்பியுள்ளார். மனைவியை காணவில்லை என்று பதறிய சீனிவாசன் கடலில் விழுந்ததாக நினைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஒரு கோடி செலவில் ஹெலிகாப்டர் மூலம் மனைவியை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் சாய்பிரியா நெல்லூரில் இருப்பதாக அவரது உறவினர் மூலம் தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து போலீசார் சாய் பிரியாவை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் ரவி என்ற நபரை காதலித்து வந்ததாகவும்,  திருமணத்திற்கு பின்னும் அவர்கள் இருவரும் பழகி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. தனது மனைவிக்காக ஒரு கோடி செலவு செய்து மனைவியை தேடிய கணவனுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment