லுடோவால் பறிபோன மனைவி..! போலீசாரிடம் புகார் அளித்த கணவர்..!

லுடோவில் பணத்தையெல்லாம் இழந்ததால், தன்னையே பணயம் வைத்து விளையாடிய பெண். 

உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில், நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் வசித்து வரும் ரேணு என்ற லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.

அவரது கணவர் அனுப்பும் பணத்தையெல்லாம் சூதாடி அழித்து வந்துள்ளார். அவள் தன் வீட்டு உரிமையாளருடன் தொடர்ந்து விளையாட்டை விளையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் இழந்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னையே பணயமாக வைத்து லுடோ விளையாடியுள்ளார்.

அதிலும் தோற்றதால், அந்த பெண் வீட்டு உரிமையாளருடன் வாழ ஆரம்பித்துள்ளார். அவள் தன் கணவனை அழைத்து நடந்த முழு சம்பவத்தையும் சொன்னாள். அவரது கணவர் பிரதாப்கருக்கு வந்து போலீசில் தனது மனைவியை மீட்டு தருமாறு புகார் அளித்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி சுபோத் கௌதம் கூறுகையில், நாங்கள் அந்த நபருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். அதன் பின் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment