சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை..!

இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பல இடங்களில், மழை நீர் தேங்கி, சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

அந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.