தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? கனிமொழி

சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் முதல்வர் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி அருகே உள்ள சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.