திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை மும்தாஜ் அதிர்ச்சி தகவல்!

Mumtaj: ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார்.

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ராணியாக இருந்தவர் மும்தாஜ். தமிழ், மலையாளம் என அனைத்துப் படங்களிலும் ஐட்டம் டான்ஸ் மூலம் ஜொலித்தவர், ஆனால் விரைவில் நடிப்பை விட்டு விலகினார். கடைசியாக தமிழில் ராஜாதி ராஜா படத்தில் தான் நடித்து இருந்தார்.

திருமண வாழ்க்கையில் நியாயமாக இருக்க முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என நடிகை மும்தாஜ் கூறியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு 25 வயது இருக்கும் போது ‘ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர்’ நோய் இருப்பது எனக்கு தெரிய வந்தது.

அந்த நேரங்களில் எல்லாம் என்னால் நிற்கவோ. உடலை அசைக்கவோ முடியாமல் நரகத்தில் இருந்தது போல உணர்ந்தேன். இதனால் ரொம்பவே மனா உளைச்சலுக்கும் ஆள் ஆனேன். ஒரு முறை இதனால் ரொம்பவே நொந்துபோய் இரண்டு மணி நேரம் அழுதுகொண்டே இருந்தேன்.

அந்த நேரத்தில் அண்ணன் மட்டும் இல்லை என்றால் நான் தற்கொலை செய்து இருப்பேன் என நடிகை மும்தாஜ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை, மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது, எனக்கும் அப்படி இருக்க தோன்றும்” என்றார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.