யார் கை உறுதியானது ..பாண்டியாவா ? பும்ராவா ?வாங்க பார்க்கலாம்

ஐசிசி 12 வது கிரிக்கெட் உலகக்கோப்பை வருகிற 30 ம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது.இதனிடையில் அதற்க்கான பயிற்சி  ஆட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தியா இதுவரை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடியுள்ளது.இதில் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் தோல்வியை சந்தித்தது. இதனிடையே நேற்று நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் 95 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி வீரர்களை வைத்து சிறு சிறு குறும்பு விடீயோக்களை வைத்து வெளியிட்டு வருகிறது .இதில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இடையே யார் கை உறுதியானது என்பது போட்டி ஆகும் .அதாவது கையில் ஓரு கம்பி வளையத்தை கொடுத்துவிட்டு வளைந்து செல்லும் வயரில் படாமல் கொண்டு செல்ல வேண்டும் என்பது போட்டி ஆகும். இதில் இருவருமே தோற்று விட்டனர். ஆனால் இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வெற்றி பெற்றுள்ளார். பாண்டியா மற்றும் பும்ராவின் வீடியோவை வாங்க பாக்கலாம் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment