நம் வாழ்வில் கெட்ட நேரம் நீங்கி நல்ல நேரம் கூடிவர இந்த பூஜையை செய்தாலே போதும்!

  • நம் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். அதுபோல நல்ல நேரம், கெட்ட நேரம் மாறி மாறி வரும்.
  • தொடர்ந்து நல்ல நேரம் மட்டுமே வந்தால், கடவுள் இருப்பதை மறந்துவிடுவோம். அதனால்தான் அவ்வபோது கொஞ்சம் கெட்ட நேரமும் நம்மை தேடி வரும்.

சிலருக்கு வெற்றியானது எளிதில் கிடைத்து விடும். ஆனால், பலருக்கு வெற்றியானது கடுமையான முயற்சி செய்தால் தான் கிடைக்கும். சிலருக்கு அப்படி கடுமையாக உழைத்தாலும் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் பெரும்பாலானோர் நமக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி செய்கிறார் என நொந்து கொள்கின்றனர்.

ஒருவருக்கு வாழ்வில் தோல்வி ஏற்படவில்லை என்றால் அவர் கடவுளை நினைத்து கூட பார்க்க மாட்டார். அதனால் தான் வெற்றியும், தோல்வியும் மனிதனுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தோல்வி ஒருவர் பெற்று வந்தால் அது அவரது தவறில்லை. கண்டிப்பாக வெற்றி அவரை தேடி வரும். தோல்வி என்பது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அந்த தோல்வியின் மூலம் நீங்கள் கற்று கொள்ளாமல் இருந்தால் தான் அது உங்களுக்கு உண்மையான தோல்வி.

தோல்வியை தவிர்த்துவிடலாம். ஆனால், கெட்ட நேரத்தை எவ்வாறு தவிர்ப்பது என்று இப்போது பார்க்கலாம். நமக்கு நல்ல நேரம் கூடிவந்து வெற்றியை கொடுக்க நமது ஜாதகத்தில் ராகு சிறப்பாக அமைய வேண்டும். அந்த ராகு தெய்வத்தின் அருள் கிடைக்க சில பூஜைகள் செய்ய வேண்டும்.

ராகுவிற்கு மிகவும் உகந்த பொருள் உளுந்து அல்லது கோமேதக கல். கோமேதகம் கல் மிகவும் விலை உயர்ந்தது. அதனால் அதனை வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும். ஆனால் உளுந்து என்பது நம் அனைவராலும் வாங்க கூடிய பொருள். இந்த உளுந்தை வாங்கி கோவிலில் ராகு மூலமும் முன்பு வைத்தும் வழிபடலாம். அல்லது துர்க்கை அம்மன் முன்பாக வைத்து ஓம் துர்காயை நமஹ என்னும் மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.

அப்படி கூறி முடித்து தங்களுக்கு தேவையானதை வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நமக்கு நல்ல நேரம் கூடி வரும். அதே போல அந்த உளுந்தை நாம் வீட்டிற்க்கு கொண்டு வரலாம். அல்லது கோவிலில் தானமாக கொடுத்துவந்தால் மிகவும் நல்லது. கோமேதக கல்லை வாங்க வசதி படைத்தவர்கள் அந்த கல்லை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் குங்கும பூஜை செய்யவேண்டும். அவ்வாறு செய்து அந்த குங்குமத்தை எடுத்து தினமும் நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நமது கெட்ட நேரம் விலகி, நல்ல நிறம் நம்மை தேடி வரும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றியுடன் சுலபமாக முடியும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.