என் தம்பியை எங்கு கொண்டு வைப்பீர்கள்..! என் தம்பி திருமாவளவன் இங்கு தான் வரவேண்டியிருக்கும்…! – கமலஹாசன்

ஊழலில் ஈடுபடும் இரண்டு கட்சிகளையும் விரட்ட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் வேலை கேட்டால் வேல் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கமலஹாசன், ஊழலில் ஈடுபடும் இரண்டு கட்சிகளையும் விரட்ட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் வேலை கேட்டால் வேல் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறி, அதிமுக, திமுக மற்றும் பாஜக காட்சிகளை விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், சமூகநீதியை பற்றி பேசுபவர்களை அதை செயல்படுத்துவதில்லை என்றும், என் தம்பி திருமாவளவனுக்கு முதலில் 21, அப்புறம் 10, இப்ப 6 இடங்கள் கொடுத்திருக்கிறார். அப்புறம் எங்க கொண்டு வைப்பீங்க என் தம்பியை, என் தம்பி திருமாவளவன் இங்கு தான் வரவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.