பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?  என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். 

நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும், பள்ளிகள் திறப்பு தேதி குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து அடுத்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment