தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் ? – அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் ?

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும், 4-ஆம் கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளது. 

 இந்நிலையில்,இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு  அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக  தெரிவித்துள்ளார். 

 மேலும், கொரோனா பாதிப்பு சூழல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும், திரையரங்குக்களுக்கு அனுமதி  தருவது பற்றியும் முதல்வர் உரிய நேரத்தில் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.