வாட்ஸ்ஆப் ப்ளஸ் எனப்படும் ஒரு போலியான வாட்ஸ்ஆப் அப்ளிகேஷன் இணையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட தகவலை திருடுவதற்கு சாத்தியமான திறனை கொண்டுள்ளது.
இந்த வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஆனது ஸ்பேம் கமெண்ட்ஸ் மூலம் பரவுகிறது. அந்த ஸ்பேம் கமண்ட்ஸ் ஆனது, வாட்ஸ்ஆப் ப்ளஸ் ஏபிகே-வை டவுன்லோட் செய்ய வழிவகுக்கின்றன. இந்த “வாட்ஸ்ஆப் ப்ளஸ்” ஆனது, கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி செயலியான “வாட்ஸ்ஆப் ரிஸ்க்வேர்” அப்ளிகேஷனின் மற்றொரு மாறுபாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போலி ஆப் ஆனது, வாட்ஸ்ஆப்பின் அதிகாரப்பூர்வ (பச்சை நிற) லோகோவை, ஒரு தங்க நிறத்தில் கொண்டுள்ளது. டேட்டாவை திருடும் இந்த போலி வாட்ஸ் ஆப் ஆனது லாஸ்ட் சீன், ப்ளூ டிப்ஸ் மறைப்பு, டைப்பிங் வாசகம் ஆகியவற்றை மறைக்கும் அம்சங்களை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போலியான ஆப் வழியாக. பிளே செய்யப்பட்ட வாய்ஸ் கிளிப்பை மறைக்கலாம் மற்றும் உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை பார்த்த விவரத்தை விட மெனு வழியாக மறைக்கலாம். கிடைக்கப்பெற்றுள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, இந்த போலி பயன்பாட்டை அபு என்று அழைக்கப்படும் ஒரு நபர் உருவாக்கியுள்ளார்.
இந்த இணையத்தளம் அரபு மொழியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரே நேரத்தில் 100 போட்டோக்களை பகிர்தல், ப்ரைவஸி செட்டிங்ஸ்-க்கான இரகசிய பாஸ்வேர்ட் உட்பட பல நம்பமுடியாத அம்சங்களை கொண்டுள்ள இந்த வாட்ஸ்ஆப் முழுக்க முழுக்க போலியான ஒரு ஆப் ஆகும்.
லைஃப்ஹேக்கர் வழியாக வெளியாகியுள்ள இந்த டேட்டா திருட்டு அறிக்கையின் படி, “சாட்வாட்ச் ஆப் ஆனது முதலில் ஐஓஎஸ் தளத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் கண்டறியப்பட்டு ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. தற்போது சாட்வாட்ச் ஆப், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கிடைக்கிறது. லைஃப்ஹேக்கர் அறிக்கையில் வெளியான மற்றொரு மோசமான தகவல் என்னவென்றால், சாட்வாட்ச் ஆப்பின், வெப் வெர்ஷனை உருவாக்கும் முனைப்பில் டெவலப்பர்கள் பணியாற்றி வருகிறார்களாம்.
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…