75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யார் யாருக்கு என்னென்ன விருது? முழுவிபரம்..!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கும்,கொரோனா பேரிடர் காலத்தில் சிறந்து விளங்கியோருக்கும் முதல்வர் வழங்கிய விருதுகள் குறித்து காண்போம்

இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து அந்தந்த மாநிலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார்.

அதன்பின்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களிடையே உரையாற்றி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கும்,கொரோனா பேரிடர் காலத்தில் சிறந்து விளங்கியோருக்கும் பல்வேறு விருதுகளை வழங்கினார்.அதன் விபரம் பின்வருமாறு:

  • தகைசால் தமிழர் விருது – சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என் சங்கரய்யா அவர்களுக்கு நேற்று அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது.
  • டாக்டர் அப்துல் கலாம் விருது – பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் சிறப்பு பேராசிரியர் முனைவர் லட்சுமணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.,
  • கல்பனா சாவ்லா விருது(துணிவு மற்றும் சாகச செயலுக்காக )– மதுரை மாவட்டத்தை சேர்ந்த கொரோனாவால் மறைந்த மருத்துவர் சண்முகப்பிரியா அவர்களுக்கு வழங்கப்பட்டது.இதனை அவரது கணவர் பெற்றுக் கொண்டார்.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது:

  • கிண்டி கொரோனா மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி,
  • சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் நில நிர்வாக இணை ஆணையர் பார்த்திபன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருது:

  • சிறந்த சேவை புரிந்ததற்காக மருத்துவர் விருது – சேலத்தை சேர்ந்த மருத்துவர் பத்மபிரியா,
  • சிறந்த தொண்டு நிறுவனம் -திருச்சி ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி,
  • சிறந்த சமூக பணியாளர் விருது – திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அவ்வையார் விருது:

  • சமூக நலன் மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சாந்தி துரைசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மூன்றாம் பாலினத்தவர் விருது:

  • தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது:

  • சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் 25 லட்சத்துக்கான பரிசுத்தொகை – தஞ்சாவூர்
  • சிறந்த நகராட்சிக்கான விருது மற்றும் முதல் பரிசு – உதகமண்டலம்
  • இரண்டாம் பரிசு – திருச்செங்கோடு,மூன்றாம் பரிசு – சின்னமனூர்.

சிறந்த பேரூராட்சிக்கான விருது:

  • சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு-திருச்சி மாவட்டம் கள்ளக்குடி,
  • இரண்டாம் பரிசு- கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம்
  • மூன்றாம் பரிசு சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு அரசு மருத்துவமனைகளுக்காண விருது:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை,
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் சாயல்குடி அரசு சமூக சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது

கொரோனா தடுப்பு பணிக்கான சிறப்பு பதக்கம்:

  • சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் ரவி,
  • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை செவிலியர் காளீஸ்வரி,
  • கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் சுகந்தி உள்ளிட்ட 9 பேருக்கு வழங்கப்பட்டது

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை காவல் துறை விருதுகள்:

  • தர்மபுரி ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் பிரபு
  • மதுரை பேரையூர் பெண் காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா
  • திருப்பூர் வடக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் கல்யாண பாண்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை விருதுகள்:

  • வட சென்னை தண்டையார்பேட்டை தீயணைப்போர் – இதயகண்ணன்,
    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தீயணைப்பு நிலையம் -சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்,
  • திருச்சி தீயணைப்பு மீட்பு நிலையம் – முகமது கான் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே 59 அடி உயரம் கொண்ட சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்,திமுக அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.