கொரோனாவை தடுக்க என்ன நடவடிக்கை ..? உச்சநீதிமன்றம் கேள்வி ..

இந்தியாவில் கொரோனா வைரசால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த போது கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்டு வரும்  நடவடிக்கை என்னென்ன..?  என மத்திய அரசிடம்  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் கொரோனவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசும் ,டெல்லி அரசும் அறிக்கையளிக்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan