சுவையான பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி?

சுவையான பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

 தேவையானவை

  • நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் – கால்பங்கு
  • வெங்காயம் – 1
  • தக்காளி  – 1
  • சாம்பார் பொடி – 3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
  • துவரம்பருப்பு – அரை கப்
  • கொத்தமல்லி தழை, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்க

 செய்முறை

 முதலில் பருப்பைக் களைந்து வைத்துக் கொள்ள கொண்டு, காய்களை நறுக்கி வைத்துக் கொண்டு, புளியை சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பருப்புடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து தேவையான நீர் விட்டு குக்கரில் வேக வைக்கவேண்டும்.

பின் பாத்திரத்தில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டும். கலவையை ஊற்றி உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். காய் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து கொதித்ததும், கொத்தமல்லித் தழை தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான பூசணிக்காய் சாம்பார் தயார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube