மேற்குவங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பு முதல்வர் அறிவிப்பு!

மேற்குவங்கத்தில் ஜூன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்கு முன்னதாக, அம்மாநிலத்தில் ஜூன் 15 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்பொழுது மேலும் சில தளர்வுகளுடன் நீடிப்பதாக அறிவித்தார்.

மேற்குவங்கத்தில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறப்பது குறித்து முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.