கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்-மு.க.ஸ்டாலின்

இன்று நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ,அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்நாளில் போற்றுவோம்.அவர்கள் வழியில் கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.