CSK அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்குவோம்- ஸ்டீவ் ஸ்மித் ..!

13 வது சீசன் ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் 1சென்னை அணி மும்பை அணியை தோற்கடித்து முதல் போட்டியை வெற்றியாக தொடங்கி இரண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஸ்டீவ் ஸ்மித் கூறியது, இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளேன்.

இந்த முறை அணியில் மிகவும் புதுமையும், அனுபவமும் கலந்துள்ளது சிறப்பான ஒரு வலுவான அணி எங்களுக்கு அமைந்துள்ளது. மேலும் அதன் மூலம் இந்த சீசனில் நாங்கள் விளையாட உள்ள சென்னை அணியுடனான முதல் ஆட்டத்தில் வெற்றியோடு தொடங்கவே விரும்புகிறேன். என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.