#IPL2020:முட்டும் சென்னைVSராஜஸ்தான்.!இன்று பலபரீச்சை

#IPL2020: இன்று சென்னைVSராஜஸ்தான் பலபரீச்சை நடத்தவுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL2020 ன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிவாங்கி கொண்டது.

மும்பையை வீழ்த்தி சரியான பதிலடி கொடுத்த சென்னை அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர்களான முரளி விஜய், ஷேன் வாட்சன் ஆகியோர் மட்டுமே அணிக்கு ஏமாற்றம் அளித்தனர். ஆனால் அம்பத்தி ராயுடு, பாப் டு பிளிஸ்சிஸ் அடித்து நொறுக்கி அரை சதம் கண்டதுடன் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அதே போல் பந்து வீச்சில் நிகிடி, தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, பியுஷ் சாவ்லா, சாம் கர்ரன் ஆகியோர் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணி வீரர்களை ஐயப்பட வைத்தனர் என்று மும்பை கேப்டன் ரோகித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடாத வெய்ன் பிராவோ இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் சென்னை அணி இன்று  களம் காணும்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ஸ்டீவன் சுமித்  உள்ளார்.இவர்  சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தலையில் தாக்கியதால் அந்த தொடரில் விளையாடவில்லை. அதன் தாக்கம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா? என்ற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னெழுப்பு கின்றனர்.

ஆனால் ஸ்டீவன் சுமித் முழு உடல் தகுதியை எட்டி விட்டதால் ஐ.பி.எல். போட்டியில் தொடக்கம் முதலே நல்ல நிலையில் விளையாடுவார் என்று ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு நேற்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

அதேநேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து வருவதால் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் முதல் கட்ட ஆட்டங்களில் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் இழப்பு ஆகும்.

குடும்பத்தினருடன் வருகை தந்து இருப்பதால் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு இருக்கும் ஜோஸ் பட்லர் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான அமீரக ஆடுகளத்தில் சென்னை அணியின் சவாலை சமாளிப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சற்று கடினமாகவே இருக்கும். ஆனாலும் இரு அணியிலும் சிறந்த வீரர்கள் பங்கு வகிப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

author avatar
Kaliraj