இணைந்து செயல்படவே விரும்புகிறோம்.. நாங்கள் சந்திக்கவில்லை – வைத்திலிங்கம்

நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கருத்து.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், அதிமுகவுக்கு கூட்டு தலைமை வேண்டும், கட்சியில் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம். 23 தீர்மானங்களை தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டதால் அவை எதுவும் செல்லாது எனவும் கூறினார். மேலும், அதிமுக பொதுக்குழு பிரச்சனை தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்திக்கவில்லை. பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தார்கள், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்தார்கள். திமுக சின்னத்தை முடக்க ஓபிஎஸ் டெல்லி செல்லவில்லை, ஜனாதிபதி தேர்தலுக்காகவே சென்றுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment