காவிரி – கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்- ராமதாஸ்

காவிரி – கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின் பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.காவிரி – கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை வைத்தோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் என்று  ராமதாஸ் தெரிவித்தார்.