திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம் – அண்ணாமலை

திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம் என அண்ணாமலை ட்வீட். 

பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா அவர்களின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில், பாஜக  மாநிலத் துணைத் தலைவர் திருமதி சசிகலா புஷ்பா  அவர்களின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்கிய திமுகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment