இடைத்தேர்தல் காலை 9 மணி வரை பதிவான வாக்கு பதிவு நிலவரம்..!

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது.அதன் படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாங்குநேரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 06.58% வாக்குகள் பதிவாகி உள்ளது.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி அதிகப்படியாக விக்கிரவாண்டி தொகுதியில் 12.84% வாக்குகள் பதிவாகி உள்ளது.

author avatar
murugan