நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு  அனுப்பி வைக்கப்படும். என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு  அனுப்பி வைக்கப்படும்.
சுமூகமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.