விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் இன்று (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டியில் திமுக சார்பில் புகழேந்தியும்,  அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிடுகின்றனர்.நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன்,  நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரும்,  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்   புவனேஸ்வரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.இதற்காக கடந்த 2 வாரங்களாக விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வந்தது.அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.பின் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.