உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியீடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல், 2021 தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை கொண்டு கிராம ஊராட்சி வார்டு வாரியாக தயாரிக்கப்பட்டு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலரால் வரும் 31ம் தேதி வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்