விருதுநகர் பாலியல் வழக்கு- ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை…!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மைதிய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத் உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கைதான ஹரிகரனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

 

 

author avatar
murugan