விராட் கோலியின் பெயர் இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில் இடம் பெற்றதால் சர்ச்சை!

உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர், பூல்பூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை ஒட்டி, வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த விராட் கோலிக்கு, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் வாக்குச்சீட்டு எப்படி வந்தது என தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது.

இதுத்தொடர்பாக 2 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு தேர்தல் அதிகாரி பிரபுநாத் உத்தரவிட்டுள்ளார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment