வன்கொடுமை செய்த குற்றவாளி தப்பியோட்டம்.., 3 காவலர்கள் இடைநீக்கம்..!

சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி தப்பிக்க அலட்சியம் காரணமாக மூன்று போலீசார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புனேவில் செப்டம்பர் 17 ஆம் தேதி நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 28 வயது நபரை வர்ஜே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அடுத்த நாளே அந்த குற்றவாளி போலீஸ் காவலில் இருந்து தப்பினார். பின்னர் குற்றவாளியை நகரத்தில் உள்ள மதுபானக் கூடத்தில் இருந்து போலீசார் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளி தப்பிக்க அலட்சியம் காரணமாக வார்ஜே காவல்நிலையத்தில் பணியாற்றிய மூன்று போலீசார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக துணை போலீஸ் கமிஷனர் சம்பாஜி கெய்க்வாட், மகேஷ் தோத்ரே மற்றும் விஷால் கடம் ஆகிய மூன்று போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்தார்.

 

 

author avatar
murugan