கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

  • அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
  • கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் .உண்மையான பாசத்துடன் நலம் விசாரிக்க வந்தவர்கள் யார் என்பதும், உடல்நலம் குறித்து சூழ்ச்சியுடன் நலம் விசாரிப்பது போல் வந்தவர்கள் யார் என்பதும் விஜயகாந்திற்கு தெரியும்.ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தமிழகத்தில் 39 தொகுதிகளில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார் என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment