விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் நேற்று பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.இவரது கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பதில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.ஒரு அரசியல் கட்சியே தவறாக முடிவு எடுக்கிறார்கள்,பின்னர் திருத்தி கொள்கிறார்கள்.அப்படி இருக்கும்போது ஒரு நடிகர் பேசுறத நாம பெரிசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.அதேபோல் சினிமா துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது,எல்லாம் அனுமதிபெற்றுத்தான் வைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.தயவு செய்து இதற்கு முன்னாள் உள்ள விஷயங்களை பேசி ,ஒருத்தருக்கொருத்தர் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…