கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலின், கடன் தொகை முழுவதையும் திருப்பித் தர தயார்- விஜய் மல்லையா

இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா,  தற்போது இங்கிலாந்தில் இருந்து வருகிறார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில் ,இந்த மாதிரியான  சூழலில் எனது கடன் பணத்தை 100 % திருப்பி அளிக்க உள்ளேன்.ஆனால்  கடனை அடைக்க நான் முன்வந்தாலும் வங்கிகள் வாங்க முன்வரவில்லை. அமலாக்கத்துறையினரும் புரிந்து கொள்ளவில்லை. கொரோனாவால் வாடும் இந்தியாவில் எனது கடன் தொகையைக் கொண்டு நிவாரண உதவிகளை மேற்கொள்ளலாம் என்றும்  நிதியமைச்சர் இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.