வாட்ஸ் அப் வீடியோ காலில் காதலியுடன் பேசிக் கொண்டே ஐதராபாத்தில் ஐடிஐ மாணவர் ஒருவர் , தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விநாயக் நகரைச் சேர்ந்த அஜ்மீர் சாகர்((Ajmeer Sagar)), தனது காதலிக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும், இறுதியாக காதலியிடம் பேச விரும்பி அழைத்ததாகவும் கூறியுள்ளார். சாகர் குறும்பு செய்வதாக பெண்கள் எண்ணியுள்ளனர். ஆனால், பேசிகொண்டே ஏற்கனவே மின்விசிறியில் சேலையால் கட்டியிருந்த தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ந்து போன அவரது காதலி, அளித்த தகவலின்பேரில், சாகரின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சாகர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.