ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் – நகுல்.!

வனிதா ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நகுல் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதனை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 – நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள்  நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து இந்நிகழ்ச்சியின் நடுவராக நகுல் கூறியது ” அம்மன் இடத்தில் இருப்பது கூட தெரியாமல் வனிதா விஜயகுமார் கடுமையாகப் பேசியுள்ளார்.  ரம்யா கிருஷ்ணன் மேடம் மற்றும் என்னை வனிதா அசிங்கப்படுத்தி உள்ளதாக அங்கே செட்டில் இருந்தவர்கள் கூறினார்கள். இதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் ஆனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் மேடம் இடம் கண்டிப்பாக வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.