இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,831 பேருக்கு கொரோனா உறுதி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,831 பேருக்கு கொரோனா உறுதி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,831 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 541 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,16,55,822 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 41,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 160 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,16,55,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 541 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,24,351 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,258 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,08,20,521 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,10,952 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 47,02,98,596 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 60,15,842 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
Join our channel google news Youtube