காதலர் தினம் என்பது, தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது தான், காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது.
காதலை புனிதமாக எண்ணுபவர்களும் உண்டு, காதலை கேவலமாக எண்ணுபவர்களும் உண்டு. காதலர் தினத்தை அன்புக்குரியவர்கள் தினம் என்று கூட அழைப்பதுண்டு.
காதலர் தினத்தை திருமணம் செய்துகொள்ள போகும் காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்பது அவசியம் இல்லை. நண்பர்கள், பெரியவர்கள் முதியவர்கள் என அனைவருமே கொண்டாடலாம்.
காதலர் தினத்தை கொண்டாடுகிறோம் என்கின்ற பெயரில், பொது இடங்களில் சுற்றி இருப்போர் முகம் சுழிக்கும் வண்ணமாக முத்தமிடுவது, கட்டி அணைப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறான ஒன்று. உண்மையான காதல் என்பது இருவருக்கும் இடையில் உள்ள காதலை நிரூபிக்க ஒரு குறுஞ்செய்தி போதுமானது. ஆனால் இன்றைய காதல் எல்லை மீறி பல தவறான பாதைகளை நோக்கி செல்கிறது என்பது வேதனை அளிக்க கூடிய செயலாக உள்ளது.