இந்து எவ்வளவு முக்கியமோ அது போல் இந்தியனும்..! மதம் மீது மதம் திணிப்பு மிகப்பெரிய வன்முறை – வசைபாடும் வைரமுத்து

மதம் மீது மதம் திணிக்கப்படுவதும் தான் மிகப்பெரிய வன்முறை என்று  கவிஞர் வைரமுத்து விளாசியுள்ளார்.

சென்னையில் மதநல்லிணக்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து  மத நல்லிணக்கம்தான் இந்த மண்ணின் இயல்பு,  மதம் மீது மதம் திணிக்கப்படுவதும் தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய வன்முறை  என்று விளாசினார்.மேலும் அவர் பேசுகையில் இந்துக்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு இந்தியர்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியம் என்று தெரிவித்தார்.

author avatar
kavitha