இன்று ஒரே நாளில் கவிஞர் வைரமுத்து மீது 2 வழக்குகள் பதிவு!

கவிஞர் வைரமுத்து மீது இன்று ஒரே நாளில் 2 வழக்குகள் பதிவு…
தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த கருத்தரங்கில், ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு இந்து அமைப்புகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, கொளத்தூர் ஆகிய காவல்நிலையங்களில் புகார் அளித்தன.
இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சிவசேனா அமைப்பைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் வைரமுத்து மீது இன்று புகார் அளித்தார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல், கன்னியாகுமரியிலும் வைரமுத்து மீது இன்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வைரமுத்து மீது இன்று ஒரே நாளில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Leave a Comment