தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், கொரோனா தடுப்பூசி போடா தொடங்கிய பின்ன என்னென்ன செய்ய வேண்டும் என்றும், 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நேரம் சரியாக இருக்குமா? என்பது குறித்து ஒத்திகை பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஒத்திகை நிகழ்வானது, சென்னை, நெல்லை, திருவள்ளூர், கோவை மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் 17 மையங்களில் இந்த ஒத்திகையானது நடைபெறுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.