உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கலவரத்தில் இதுவரை 112 பேர் கைது .
குடியரசு தினத்தை முன்னிட்டு கஸ்கஞ்ச் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தும் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும், இணைந்து நடத்திய பேரணியின் மீது மர்ம நபர்கள் கல்வீசியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. கடைகள் பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் கலவரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 31 பேரும் முன்னெச்சரிக்கையாக 81 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …

Leave a Comment