உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியின் தந்தையான பிரபு தயால் இன்று தனது 95 வயதில் காலமானார். அவர் தனது குடும்பத்தினருடன் டெல்லியின் ராகப்கஞ்ச் பகுதியில் வசித்து வந்தார். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.